15 Sept 2012

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்

தொடர் பதிவுக்கு அழைத்த அருமை நண்பன் XXXX(பெயரை குறிப்பிட விரும்பவில்லை)க்கு  நன்றி 

பதிவுலகத்தில் என்னை மதித்து ஆதரவு தந்த நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும்  பதிவுலக திரட்டிகளுக்கும் நன்றி

இப்போ நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன் என்பதை பற்றி  சிறு தொகுப்பு


1.அது என்ன Kingdom of கீழக்கரை.. ?
   முதலில் பதிவுலகம் வரும் எண்ணமே இல்லை அப்படியே போய்இருக்க வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது (அது உங்கள் நல்ல நேரம் சார் )
  
கீழக்கரை.. நான் பிறந்து வளர்ந்த ஊர் கடல்கள் சூழ்ந்து உள்ள ஒரு அற்ப்புத நகரம் ,ஊரை சுற்றி சிறு சிறு கிராமங்கள் (அப்போ உன் என்ன பெரிய சிட்டியா ? அப்படின்னு கேட்க்க வேண்டாம் கொஞ்சம் பெரிய ஊர்தான் )

kilakkarai bride



என்னோட ஊர் ராமநாதபுர மாவட்டத்தில் இருக்கு
 முதலில் டுபாக்குர் no 1  என்று தான் தலைப்பு வைத்து இருந்தேன் காலப்போக்கில் 
Kingdom of கீழக்கரை.. என மாறி விட்டது
  பதிவுலகத்திற்கு வர காரணம் ?
        மிக முக்கிய காரணம் இன்டலி  தான் ஒரு வருடதிர்க்கு முன் நான் தினமும் இன்டலி  இணையத்தில் பல பேருடைய பதிவுகளை பார்ப்பேன் அந்த ஆர்வம் தான் மொக்கை பதிவு புகழ்
Kingdom of கீழக்கரை.. ஆகி விட்டது 


  2.முதல் பதிவை பற்றி ?
  நம்முடைய முதல் பதிவு எனக்கு அன்றைக்கு தெரிந்த நம்முடைய மொபைல் போனில் GPRS வசதியை பெற 
பற்றி என்னுடைய பதிவுதான் அது ஆனால் அதை வலைப்பதிவு  திரட்டியில் சேர்க்க வில்லை 


3.முதல் பாராட்டு 
என்னுடைய   
Mobile-ல் இனையதளத்தை உருவாக்கலாம்  என்னும் பதிவுக்கு சுரேஷ்  மற்றும் பின்னோக்கி இருவரின்  பின்னுட்டம் என் எழுத்து ஆர்வத்தை இன்னும் அதிகம் ஆக்கியது 

4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?
பின்னுட்டம் என்பது முக்கியம் ஆனால் ஆதி விட முக்கியம் வாக்கெடுப்பு என்பதில் உறுதியாக இருப்பவன் நான்  நம்முடைய பதிவு எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் பல பேரை சென்றடைய வாக்கெடுப்பில் வாக்கின் எண்ணிக்கை தேவை இல்லையா அதனால் நான் அதிகம் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவேன்  நான் ஆயிரக்கணக்கில் அளித்த வாக்குகள் சாட்சி 


5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்விர்கள் ?
 வேற என்ன ஆரம்ப காலத்தில் நியூஸ் பானை ,தமிளிஷ் ,தமிழ்10 உளவு, நம்குரல் ,என எல்லா வலைபதிவு திரட்டியுலும் பதிவை இணைப்பேன்
இப்போ இன்டிலி ,திரட்டி பேஸ்புக் மற்றும் தமிழ் 10 மட்டுமே

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?
உனக்கு ஏன் இந்த தேவை  இல்லாத வேலை  எழுதி ஏதும் ஒரு ருபாய் லாபம் இருக்க இதுதான் அவர்களின் கருத்து

7.உங்களுக்கு பிடித்த  பதிவர்?
  என் மீது பாராட்டு தெரிவிக்கும் எல்லா நண்பர்களும் எனக்கு பிடித்த  பதிவர்களே 
8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
ஒன்றும்  இல்லை ,எப்பவும் போல தூங்கி தூங்கி எந்திருக்குறது தான்.


9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?
நண்பர்கள் அதிகம் ஆனால் யாருடனும் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என் தொலைப்பேசி இலக்கம் யாருக்கும் கொடுக்க வில்லை அவர்கள் தொடர்பு கொள்ளும் போது என்னால் பேச முடியாத என் வேலை 


kingdomofklk@gmail.com
என் இலக்கத்திற்கு உங்கள் பெயர் வலைப்பதிவு தலைப்புடன் செய்யவும் mail வாய்ப்பு கிடைக்கும் போது நானே தொடர்பு கொள்வேன் 



10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?

அந்த அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை
எனக்கு உங்களின் தொடர் ஆதரவு தேவை






நான் தொடர் பதிவு எழுத அழைப்பது
அமீரக மற்றும் உலகச்செய்திகள்


மருத்துவம்
சமையல் குறிப்பு
செய்திகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்